பராசக்தி…………..,
( தமிழ் நாட்டையே
தன் பேனா முனையில் கட்டிப்போட்ட கலைஞரின் வசணம்……………………, வீரப்பன் இற்பதற்கு முன்னால்
அவன் நீதிமன்றத்தில் சரணடைந்தால் பொது மண்ணிப்பு வழங்க தயார் என 1996-20 வாக்கிலே ஆட்சியாளர்களாள்
கோரிக்கை முன்வைக்கப் பட்டது……, ஒரு வேளை இந்த கோரிக்கையை எற்றுக்கொண்டு வீரப்பன் நீதிமன்றத்தில்
சரணடைந்து உரையாற்றி இருந்தால் என்ன பேசி இருப்பான் என்று ஒரு கற்பணையான உரையாடல் இது
…………………………)
இனி வீரப்பன்………………..
இந்த நீதிமன்றம்
விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கின்றது.
புதுமையான மனிதர்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல. வழக்காளும்
நானும் புதுமையான மனிதனும் அல்ல. வாழ்க்கை பாதையிலே சர்வசாதரணமாய் தென்படக் கூடிய ஒரு
ஜீவன்தான் நான்…..,
சந்தன மரத்தினை
வெட்டினேன்…….., போலிஸ்சாரை தாக்கினேன்…….., குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படி
எல்லாம்…….,
நீங்கள் எதிர்பார்கிறிர்கள்
நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று…….,
இல்லை……., நிச்சயமாக
இல்லை…….,
சந்தன மரத்தினை
வெட்டினேன்…….., சந்தனமரம் கூடாது என்பதற்காக அல்ல…….,
சந்தனமரம் போலிஸ்சாரின்
கூடாரத்தில் கள்ளத்தனமாக விற்க்கக் கூடாது என்பதற்க்காக……………….,
போலிஸ்சாரை தாக்கினேன்……..,
அவன் மக்கள் பணியாளன் என்பதற்காக அல்ல………, காக்கிச் சட்டையை அணிந்து கொண்டு மக்களிடத்திளே
கை நீட்டினான் என்பதற்காக…….,
உனக்கேன் இவளவு
அக்கறை…….., உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை…….,
நானே பாதிக்கப்பட்டேன்……,
நேரடியாக பாதிக்கப்பட்டேன்………,
சுயநலம் அங்கே…….,
என் சுயநலத்தில் பொது நலமும் கலந்திருந்தது…….,
ஆகாரத்திற்காக
தழைகளை சாப்பிட்டுவிட்டு உழவனின் மலட்டு மண்ணை மறுபிரசவம் செய்கிறதே……, மண்புழ……….
அதைப்போல…………..,
என்னை குற்றவாளி
என்கிறார்கள்…….,
இந்த குற்றவாளியின்
வாழ்க்கையிலே கொஞ்சம் பின்னொகிப் பார்த்தால் அவன் கடந்து வந்த காட்டாறுகள் எவ்வுளவு
என்று கணக்கு பார்க்க முடியும்….
ஆர்ப்பறிக்கும்
குயில்கள் இல்லை என் பாதையில்…….,
படமெடுக்கும் பாம்புகள்
நலிந்துதிருக்கின்றன……………….,
தென்றலை தீண்டியது
இல்லை நான்……,
காட்டுத்தீயை தாண்டியிருக்கிறேன்……….,
கேளுங்கள் என்
கதையை……, தீர்ப்பு எழதுவதற்கு முன் தயவுசெய்து கேளுங்கள்………………..,
தமிழ் நாட்டிலே
இந்த சத்திய மங்களத்திலே பிறந்தவன் நான்…., பிறக்க ஒரு இடம்……, பிழைக்க ஒரு இடம்…..,
தமிழ் நாட்டின்
தலையெழத்துக்கு நான் மட்டும் என்ன விதி விளக்கா….?
சத்திய மங்களம்……,
என்னை வளர்த்தது…….,உயர்ந்தவன் ஆக்கியது……,
அன்றாட தெவைக்காக
சுள்ளி பொறுக்கி விற்று அடுப்பேரித்து அரை வயிறு கஞ்சி குடித்தனர் எம் மக்கள்……,
இதோ………, காட்டில்
சந்தன மரைங்களை வெட்டி களவாடிய மோசடி வழக்கில் ஈடுபட்டு உங்கள் முன் குற்றவாளியாக நிற்க்கிறானே
இந்த காட்டு இலாக்கா அதிகாரி……,
அவன் வலையில் விழந்தவனில்
நானும் ஒருவன்…………….,
அவன் நயவஞ்சகப்
பேச்சைக் கேட்டேன்….., மதி இழந்தேன்………, மரங்களை
வெட்டினேன்……….,
கடைசியில்தான்
தெரிந்தது……, வெட்டிய மரங்கள் கொட்டிய பணங்கள் கவர்மேன்ட் கஜானாவுக்கு செல்லவில்லை….., இந்த காட்டு இலாக்கா அதிகாரியின் கைக்கு சென்றது
என்று…………..,
மதி தெளிந்து காண்டேன்
என் மக்களை…………….., கண்ணற ஒவியமாக……..,
ஆம்….., சுள்ளி
பொறுக்க சென்ற எம்கிராமத்து கண்ணிகளின் கற்பை சின்னாபின்னமாக்கியது இந்த காட்டு இலாக்கா
போலிஸ்……..,
ஊரின் பெயரோ சத்திய
மங்களம்…………., மங்கலகரமான பெயர்…..,ஆனால் ஊரிலோ குடிக்க கால் வயிற்று கஞ்சிக்கு வழியில்லை
எம்மக்களுக்கு ……,
செழித்து வாழ்ந்த
கிராமம்………, சீரழிந்துவிட்டது….,
கையிலே வேலையில்லை…..,
கண்ணில் நீர்…., எம்மக்கள் நீதி கேட்டு அலைந்தனர்…., அவர்களுக்காக நானும் அலைந்தேன்…..,
எனக்கு கருனை காட்டியவர்கள்
பலர்…….., அவர்களிளே சிலர் கைமாறாக சந்தன மரத்தினை கேட்டனர்…., எம் மக்களுக்கு நீதி
கிடைக்க மீண்டும் வேட்டினேன் ……,
கொலை வழக்கிலே
சம்மந்தபட்டு இதோ இங்கு கைதியாக நிற்கின்றனே………, இந்த அரசியல்வாதி……………,
இவன் பேச்சால்
மயக்க முயன்றான் என் மக்களை…..,
எம் மக்கள் மீதுள்ள
வழக்குகளை வாபஸ் வாங்கிவிடுவதாய் சொல்லி ஒட்டு வாங்கியவன்…………., வென்றதும் அவனே எம்மக்களின்
மீது பொய் வழக்கு போட்டான்…………….,
நான் அப்போதே தடுத்திராவிட்டால்
எம்மக்கள் இவனை அன்றே கொலை செய்திருப்பார்கள்………..,
கடவுள் பக்தர்களும்
எம்மக்களை காப்பாற்ற வந்தார்கள்…………..,
பிரதிபலனாக எம்
கிராமத்து கண்ணியரின் கடைக்கண் பார்வையை தேடினர்…..,
அவர்களிளே தலைமையானவன்
இதோ இந்த பூசாரி…………,
பராசக்தியின் பெயரால்……………..,
உலக மாதவின் பெயரால்……………..,
எம்கிராமத்து மக்கள்
இந்த உலகத்தில் புழவாக துடித்தப்படியாவது உயிரோடு இருந்திருபார்கள்………………..,
அவர்களை தற்க்கொலை
செய்து கொல்ல தூண்டியது இந்த பூசாரிதான்……………,
எம்மக்கள் தங்களுக்கு
வந்த சோதனையை இந்த இரக்கமற்ற உலகத்திற்கு சொல்லிவிட்டு இறக்க விருப்பவில்லை……….., அதனால்
அவர்கள் தற்க்கொலை செய்து கொண்டார்கள்………………….,
வாழ விருப்பமில்லாதவர்கள்
தற்க்கொலை செய்துகொள்வது விந்தையல்ல…,
உலககின் பெருபாலான
நாடுகளை தன் காலடியில் வைத்திருந்த சர்வாதிகாரி, இன்றும் கூட எதிரிகள் உச்சரிக்கப்
பயப்படும் ஒரு சானக்கியனின் பெயர்……., ஹிட்லர்……., அவரே கூட போரில் எற்பட்ட தோல்வியை
தாங்கிக் கொள்ள முடியாமல் மணம் உடைந்து தூக்கு போட்டு தற்க்கொலை செய்து கொண்ட சரித்திரம்
உண்டு.
அதே முறையைத்தான்
கற்ப்பை காப்பாற்ற கையாண்டு இருக்கிறார்கள் எம்மக்கள்………….., இது எப்படி குற்றமாகும்………………..?
நீதி கெட்டு அலைந்த
எனக்கு வாழ நீதி கிடைக்கவில்லை…………,
இந்த சொந்த மண்ணிலே
பிறந்த பெண்ணுக்கு வாழ பாதுகாப்பில்லை…………..,
நான் மட்டும் சுயநலத்தோடு
கொஞ்சம் விட்டுக்கொடுத்திருந்தால்…………..,
கொடீஸ்வரன் வீட்டு
பள்ளியறையை போல என் வீட்டை செதுக்கிருப்பேன் சந்தன மரத்தினால்……………..,
மானத்தினை விலை
பேசியிருந்தால் மாளிகை வாசியினை என் மடியிலே கிடத்திருப்பேன்…………,
இதைத்தான் இந்த
நீதி மன்றம் விரும்புகின்றதா……………?
பகட்டு எம்மக்களை
விரட்டியது………………., பயந்தோடினார்கள்,
வழக்கு எம்மக்களை
துரத்தியது…………………., மீண்டும் ஒடினார்கள்,
பக்தி எம்மக்களை
பயமுறுத்தியது……………….., ஒடினர்……., ஒடினர்……., வாழ்க்கையின் எல்லைக்கே ஒடினர்…..
அந்த ஒட்டத்தினை
தடுத்திருக்க வேண்டும்…………………., வாட்டத்தினை போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தினை
நீட்டுவோர்……………….,
செய்தார்களா………………..,?
வாழவிட்டார்களா…………………?
வழக்கறிக்ஞர்
: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்……………..,
இல்லை…., யார்
வழக்கிற்கும் இல்லை…………..,
அதுவும் என் வழக்குத்தான்…..,
என்மக்களின் வழக்கு……………..,என்மக்களின் மானத்தை அழிக்க எண்ணிய மகா பாவிகளுக்கு புத்தி
புகட்டுவதிலே இந்த மண்ணின் மைந்தன் நான் ஒடுவதிலே என்ன தவறு…………?
நான் சந்தன மரங்களை
கடத்தியது ஒரு குற்றம்………………..,
கண்ணட நடிகர் ராஜ்குமாரை
கடத்தியது ஒரு குற்றம்……………..,
காக்கி சட்டை காரர்களை
கடத்தி கொன்றது ஒரு குற்றம்………………….,
இத்தனை குற்றங்களுக்கும்
காரணம் யார்…………….?
காவிரி விவசாயிகளை
கஞ்சிக்க்கு வழியில்லாதவர்களாக அலைய விட்டது யார்க் குற்றம்………………….?
விதியின் குற்றமா…………..?
அல்லது தமிழ் நாட்டு நெற்களஞ்சியதிலே வளர்ந்த
அரிசியில் வயிறு வளர்த்து தமிழனுக்கு தண்ணீர் தர மறுக்கும் கண்ணடர்களின் குற்றமா…………….?
ராஜ்குமாரை கடத்தியது
குற்றமா………….? இல்லை………….., சொகுசு கட்டிலிலே தவழ்ந்த அவனை காட்டிலே கட்டாந்தரையில்
தவழவிட்டு காவிரியிலிருந்து தண்ணீரை வர வைத்தது குற்றமா……………….?
கடவுளின் பெயரால்
சீட்டு கம்பேனி போல பெருகிவிட்ட போலி சாமியார்களின் அசிர்மங்களை நாட்டிலே வளர விட்டது
யார்க் குற்றம்………………….?
கடவுளின் குற்றமா………….?
அல்லது கடவுள் பெயரைச் சொல்லி காமசேபம் நடத்தும் போலி சாமியார்களின் குற்றமா………………..?
இந்த குற்றங்கள்
களையப்படும் வரை என்னைப் போன்ற வீரப்பன்களும், எம்மக்களை போன்ற அப்பாவிகளும் கலையப்படுவதில்லை……………………
இதுதான் எங்களின்
வாழ்க்கையின் ஏட்டில் எந்த பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள
அரசியல் தத்துவம்………… .